அதிருப்தி என்றாலும் அடிநிலை உறுப்பினர்கள் ஹரப்பான் வெற்றிக்குப் பாடுபடுவார்கள்- குவான் எங்

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பெர்சத்து வேட்பாளருக்காக தேர்தல் பணி செய்வதில் டிஏபி அடிநிலை உறுப்பினர்களுக்கு அவ்வளவாக மனநிறைவு இல்லை என்பதை ஒப்புக்கொண்ட லிம் குவான் எங், என்றாலும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகள் “ஒன்றுபட்ட வெற்றிக்காக ஒன்றுபட்டு உழைக்கத்தான் வேண்டியுள்ளது” என்றார்.

“அதிருப்தி நிலவுவதை மறுக்கவில்லை, ஆனாலும் ஒன்றுபட்ட வெற்றிக்காக ஒன்றிணைந்து பாடுபடத்தான் வேண்டும்”, என டிஏபி தலைமைச் செயலாளரான லிம் கூறினார்.

“பக்கத்தான் ஹரப்பானுக்குத் தோல்வி என்றால் அது அதில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் ஒரு தோல்விதான் அதனால் இலக்கை அடைய பாடுபடுவது முக்கியமாகும்” என்று இன்று பெட்டாலிங் ஜெயாவில் சிலாங்கூர் டிஏபி மாநாட்டுக்கிடையில் செய்தியாளர்களிடம் பேசியபோது லிம் கூறினார்.