வுஹானில் உள்ள மலேசியர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

தற்போது வுஹான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து 82 மலேசியர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு இல்லை என்று சீனாவிற்கான மலேசிய தூதர் ராஜா நுஷிர்வான் ஜைனல் ஆபிடின் தெரிவித்தார். மலேசியர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது என்றார்.

“இதுவரை, கடும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள நகரமான வுஹான் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் 82 மலேசியர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் பொதுவாக நல்ல நிலையில் உள்ளனர். சக மலேசியர்களின் விவரங்களை வழங்க மிகவும் உதவியாக உள்ளனர்” என்று நேற்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார். – Bernama