வுஹான், சீனா பிரஜைகளை திருப்பி அனுப்பியது மலேசியா

கொரோனா வைரஸ் | செவ்வாயன்று கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) வுஹானில் இருந்து வந்திறங்கிய 14 சீனா பிரஜைகளை அரசாங்கம் திருப்பி அனுப்பியது.

வுஹான் மற்றும் ஹூபே மாகாணத்திலிருந்து வருபவர்களை தற்காலிகமாக தடைசெய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் முகிதீன் யாசின் தெரிவித்தார்.