லிம் குவான் எங்கின் மகன் கைது செய்யப்பட்டார் எனும் தகவல் தவறானது – ஐ.ஜி.பி

முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் மகன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டை காவல்துறைத் தலைவர் அப்துல் ஹமீட் படோர் மறுத்துள்ளார்.

டி.ஏ.பி. பொதுச்செயலாளரின் மகனுக்கு சிங்கப்பூர் குடியரசு அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படும் ஊகங்கள் குறித்து மலேசியாகினி கேட்டபோது “அது உண்மையல்லை” என்று அவர் சுருக்கமாக பதிலளித்தார்.

பெயர் குறிப்பிட மறுத்த ஒரு லிம் குடும்ப உறுப்பினரும் இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.

முன்னதாக, சீன மொழி செய்தித்தாள் நன்யாங் சியாங் பாவ், “பக்காத்தான் ஹராப்பானின் மூத்த தலைவரின்” மகன் சிங்கப்பூருக்குள் RM2 மில்லியனைக் கொண்டுவர முயன்ற பின்னர் கைது செய்யப்பட்டதாக செய்தியை அறிவித்திருந்தது.