பார் கவுன்சிலின் புதிய தலைவர் சலீம் பஷீர் பாஸ்கரன்

2020/2021 காலத்திற்கான மலேசிய பார் கவுன்சிலின் புதிய தலைவராக சலீம் பஷீர் பாஸ்கரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவிட்-19 கவலைகள் காரணமாக மிகக் குறைந்த ஏஜிஎம் வாக்குப்பதிவுக்கு மத்தியில் சலீம் பஷீர் புதிய பார் தலைவராகி உள்ளார்.

2020/2021 ஆண்டுக்கு மலேசிய பார் கவுன்சிலை சலீம் பஷீர் பாஸ்கரன் தலைலைம வகித்து வழிநடத்துவார். துணைத் தலைவர் சுரிந்தர் சிங் செயின் சிங், செயலாளர் ஏ.ஜி.காளிதாஸ் கிருஷ்ணன் மற்றும் பொருளாளர் முகமட் எஸ்ரி அப்துல் வஹாப் ஆகியோர் உதவுவார்கள்.

38 உறுப்பினர்கள் கொண்ட 2020/2021 பதவிக்காலத்திற்கான பார் கவுன்சிலின் முதல் கூட்டத்தின் போது இந்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னதாக, மலேசிய பார் கவுன்சிலின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மதியம் 12.15 மணி வரை குறைந்தபட்சம் 87 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பு குறித்த கவலைகள் காரணமாக இந்த சிறிய வருகை இருப்பதாக நம்பப்பட்டது.