பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும்!

முல்லை பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்று வைகோ சென்னை தீ.நகரில் வைத்து தெரிவித்துள்ளார்.

“தந்தையும் தம்பியும்” புத்தகம் வெளியீட்டு விழா தி.நகரில் நேற்று நடந்தது. பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தகத்தை வெளியிட முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய வைகோ; கேரளத்துக்கு அரிசி உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களையும் வழங்கி வருகிறோம். ஆனால் கேரளா இதுவரை நியாயமாக நடந்து கொள்ளவில்லை.

எந்த பூகம்பம் வந்தாலும் உடையாத அணைதான் முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டு மாநிலத்தில் இருக்கக்கூடிய முல்லைபெரியாறு அணையினை உடைப்போம் என்று எவ்வாளவு திமிருடன் பேசுகின்றார்கள்.

அப்படி அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாக உடையும். இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.