சிங்கப்பூரில் இருந்து திரும்பும் மலேசியர்கள் நுழைவு அனுமதி பாரத்தைப் பெற வேண்டும்

சிங்கப்பூரிலிருந்து 400 மலேசியர்கள் மட்டுமே தினமும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தியதிலிருந்து சிங்கப்பூர் குடியரசில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை சுமுகமாக நாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஜொகூர் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் மலேசிய குடிவரவுத் துறை எடுத்த முடிவு இது என்று அவர் கூறினார்.

அவர்கள் சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகத்தில் இருந்து நுழைவு அனுமதிப் பத்திரத்தைப் பெற வேண்டும் என்றும், நாடு திரும்பும் தேதிக்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னதாக [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“விண்ணப்பம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. தூதரகம் இதுவரை 900 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது,” என்று அவர் இன்று ஊடக மாநாட்டில் அவர் கூறினார்.

அவர்கள் திரும்பி வந்தபின்னர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.