கொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் – பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளி

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது.

ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

malaimalar