கோவிட்-19: 19 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு

கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று 277 பாதிப்புகளாக உயர்ந்து, இன்று மீண்டும் இரட்டை இலக்கங்களாக குறைந்துள்ளது.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 19 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,266 ஆக உள்ளது.

“புதிய 19 பாதிப்புகளில் ஏழு பாதிப்புகள் வெளிநாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள், இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.”

“12 உள்நாட்டு பாதிப்புகளில், மூன்று குடிமக்கள் அல்லாதவை மற்றும் ஒன்பது மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்டவை” என்று அவர் கூறினார்.

மதியம் நிலவரப்படி, 51 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார். இதனால் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 6,610 அல்லது 80 சதவீதமாக உள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் இருக்கும் பாதிப்புகள் 1,540 ஆகும்.

இன்று ஓர் இறப்பும் பதிவாகியுள்ளதாக அவர் அறிவித்தார்.

“116வது இறப்பு (7733 நோயாளி) – 61 வயதான மலேசிய நபர். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றின் பின்னணி கொண்டவர்.”

“அவர் மே 29, 2020 அன்று ஜோகூரின் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 4 அன்று இரவு 10.20 மணிக்கு அவர் இறந்துவிட்டார்” என்று அவர் கூறினார்.