28 நாட்கள் பதிவு இல்லாவிட்டால் மலேசியா கோவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கலாம்

28 நாட்களுக்கு பாதிப்புகள் ஏதும் பதிவு செய்யப்படாவிட்டால் மட்டுமே மலேசியா கோவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கும்.

இந்த 28 நாள் காலம், கிருமி அடைகாத்தல் காலத்தின் இரண்டு சுழற்சிகள் ஆகும் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.