தேவையில்லாததை வெட்டி வீசுவோம் – அன்வார்

பாக்காத்தான் ஹராப்பான் மற்றும் அதன் கூட்டணிகளிடையே ஏற்பட்டுள்ள பிரதமர் வேட்பாளர் பிரச்சனைக்கு மத்தியில், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தோட்டமிடும் பணியில் ஈடுபட்டார்.

மூங்கில் மரங்களை வெட்டிக் கொண்டிருக்கும் அவரின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி உள்ள நிலையில், நெட்டிசன்கள் அவற்றை வேறு கோனத்தில் விளக்கியுள்ளனர்.

“வசனங்கள் உட்பொருளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே” என்று அன்வாரின் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்பவர்களில் ஒருவர் அன்வாரின் விளக்கம் குறித்து கருத்து தெரிவித்தார்.

“வழக்கம் போல், இந்த மாலைப் பொழுது தோட்டமிடும் நடவடிக்கைகளுடன் தொடர்கிறது. சூழலை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்கும் நோக்கில், தேவையற்றதை நறுக்கித் தள்ளிவிட்டு சுத்தம் செய்கிறோம்” – அன்வார் இப்ராஹிம் (@anwaribrahim) ஜூன் 18, 2020.