பிரேசிலை தொடர்ந்து மெக்சிகோவை குறிவைத்த கொரோனா – அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக மெக்சிகோ நாட்டில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

ஜெனிவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 91 ஆயிரத்து 85 ஆயிரத்து 223 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 37 லட்சத்து 89 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 884 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 49 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 237 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்காவும், பிரேசிலும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இந்நிலையில், மெக்சிகோ தற்போது கொரோனாவின் அடுத்த இலக்காக மாறி வருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 1,044 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 1,22,610

பிரேசில் – 51,407

இங்கிலாந்து – 42,647

ஸ்பெயின் – 28,324

இத்தாலி – 34,657

மெக்சிகோ – 21,825

பிரான்ஸ் – 29,663

இந்தியா –  13, 699

malaimalar