சீபு தீ விபத்து: 8 குழந்தைகள், 38 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்

நேற்று இரவு சீபுவிலிருந்து 132 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உலு அரிப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு குழந்தைகள் 38 சிறுவர்கள் உட்பட 135 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 12 முதியோர், 12 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 பெரியவர்கள் ஆகியோரும் அடங்குவர். இந்த சம்பவத்தில் அவர்கள் வாழ்ந்த 18-கதவு ‘ரூமா பாஞ்சாங்’ முற்றிலுமாக அழிந்தது. அவர்கள் தற்போது இன்னும் கட்டுமானத்தில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை 3.46 மணியளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளதாக மலேசிய தீயணைப்பு மற்றும் சரவாக் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

சிபு பிரிவு பேரிடர் மேலாண்மைக் குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உதவி உள்ளிட்ட ஆரம்ப உதவிகளை வழங்கியது.