கோவிட்-19: 21 புதிய பாதிப்புகள், புதிய திரளைகள் கண்டறியப்பட்டன

புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில், நாட்டில் கோவிட்-19 இரண்டாவது பாதிப்பு அலை வெடிப்பதற்கான சாத்தியம் குறித்து பல்வேறு தரப்பினரின் கவலைகள் உண்மையாவதாகவே தெரிகிறது.

இது இந்த மாதத்தில் பதிவான அதிக எண்ணிக்கை ஆகும்.

21 புதிய பாதிப்புகளில், 15 உள்ளூர் பாதிப்புகள் மற்றும் 6 வெளிநாட்டில் ஏற்பட்ட இறக்குமதி பாதிப்புகள் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

சுகாதார அமைச்சு மற்றொரு புதிய திரளையைக் கண்டறிந்துள்ளது.