மூன்று புதிய திரளைகள்

ராம்நாத், அல் கோபார் ஆய்வுக்குரியவர்களின் திரளை மற்றும் எல்சா திரளை (Kluster PUI Ramnad, Kluster PUI Al Khobar dan Kluster Elsa) ஆகிய மூன்று புதிய திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.

எல்சா திரளை குறியீட்டு நேர்வு, பிலிப்பைன்ஸிலிருந்து விமானப் பயணம் மேற்கொண்டு, பின் கொரியாவிலும் பயண வரலாற்றைக் கொண்டுள்ள ஒரு மலேசியர் அல்லாதவர் சம்பந்தப்பட்டது ஆகும்.

இந்த நபர் ஜூலை 16 ஆம் தேதி மலேசியாவிற்குள் நுழைந்தார். ஜூலை 22 அன்று நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டு பகாங்கின் சுல்தான் ஹாஜி அகமட் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை நெருங்கிய தொடர்பு கண்டறிதலில் 108 நபர்கள் சோதனையிடப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் நேர்மறையாகவும் 48 பேர் எதிர்மறையாகவும் கண்டறியப்பட்டுள்ளனர். 57 முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

ராம்நாத் ஆய்வுக்குரியவர்களின் திரளையைப் பொறுத்தவரை, அதன் குறியீட்டு நேர்வு, ஜூலை 6 ஆம் தேதி இந்தியாவில் இருந்து திரும்பிய மலேசியர் சம்பந்தப்பட்டது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், கோலாலும்பூர் சர்வதேச விமானநிலையத்தின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் எதிர்மறையாகக் கண்டறியப்பட்டு வீட்டு கண்காணிப்பு ஆணைக்கு (HSO) உட்படுத்தப்பட்டார்.

13வது நாள் சோதனையில் அவர் நோய்க்கு நேர்மறையானவராக கண்டறியப்பட்டு சிலாங்கூரின் சுங்கை புலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விசாரணை மற்றும் நெருங்கிய தொடர்பு கண்டறிதல் சோதனை இதுவரை 18 நபர்களை உள்ளடக்கியுள்ளது. இதில் இரண்டு நேர்மறை, 13 எதிர்மறை மற்றும் இன்னும் மூன்று முடிவுகள் நிலுவையில் உள்ளன.

அல் கோபர் ஆய்வுக்குரியவர்களின் திரளை ஜூலை 10 அன்று சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய மலேசியர் சம்பந்தப்பட்ட குறியீட்டு நேர்வை உள்ளடக்கியது.

ஆரம்பத்தில், கோலாலும்பூர் சர்வதேச விமானநிலையத்தின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் எதிர்மறையாகக் கண்டறியப்பட்டு, ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் அவர்களது வீட்டில் வீட்டு கண்காணிப்பு ஆணைக்கு (HSO) உட்படுத்தப்பட்டார்.

அவர்கள் ஐந்து பேரும் சவூதி அரேபியாவிலிருந்து குறியீட்டு நோயருடன் ஒரே விமானத்தில் ஏறி நாடு திரும்பியுள்ளனர். அவர்களின் வீட்டில் மேலும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர்.

குறியீட்டு நோயர், ஜூலை 20 அன்று நோய்க்கு நேர்மறையாக கண்டறியப்பட்டார். குறியீட்டு நோயரின் ஏழு குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நேர்மறையாகவும் ஆறு பேர் எதிர்மறையாகவும் கண்டறியப்பட்டனர்.

இந்த திரளை குறியீட்டு நேர்வு ஏற்றப்பட்ட விமானத்தின் மற்ற பயணிகளை சோதனையிடுவது உட்பட விசாரணைகள் மற்றும் நெருங்கிய தொடர்புத் கண்டறிதல் நடந்து வருகின்றன.