கோவிட்-19: தினசரி பாதிப்புகள் 3 இலக்கங்களை அடைந்தால் பி.கே.பி மீண்டும் அமல்படுத்தப்படும்

நாட்டில் தினசரி நேர்மறை கோவிட்-19 பாதிப்பு மூன்று இலக்கங்களை எட்டினால், மீண்டும் ஒரு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) அமல்படுத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால், பி.கே.பியை மீண்டும் அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை, இதனால் தொற்றுநோயின் ஆரம்ப காலகட்டத்தில் செய்யப்பட்டதைப் போலவே இயக்கத்தையும் மட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

“தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிக்கை பாதிப்புகளின் எண்ணிக்கை நம்முடைய சொந்த மறதி காரணமாக இருப்பதாகக் கூறுகிறது. இயக்க முறையை (எஸ்ஓபி) மீறும் போது பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்”.

“இப்போது இரண்டு இலக்கங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கும் புதிய பாதிப்புகள் மூன்று இலக்கங்களை எட்டினால், பி.கே.பி செயல்படுத்தப்படும். எங்களுக்கு வேறு வழியில்லை, எல்லா இயக்கங்களையும் முடக்க நேரிடும்.”

“ஹரி ராயா ஹஜிக்கான எஸ்ஓபி நாளை அறிவிக்கப்படும்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இது குறித்து நாளை மற்றொரு அறிவிப்பு உள்ளதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.