ரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று துவக்கம்

மாஸ்கோ: ரஷ்யாவில் மனிதர்களுக்கு இடையே இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று (ஜூலை 27) துவங்கப்படுகிறது.

ஏற்கனவே ரஷ்யாவில் முதற்கட்ட பரிசோதனை மனிதர்களுக்கிடையே நடத்தப்பட்டது. இதில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து ஆர்வலர்களுக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி உண்டானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் வைராலஜி தேசிய ஆராய்ச்சி மையம் இரண்டாம் கட்ட மனிதர்களுக்கிடையேயான சோதனை ஜூலை 27 ம் தேதி நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதி ஜூலை 24 ம் தேதி பெறப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக ரஷ்யாவில் 3 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 17 கோடி தடுப்பூசி மருந்துகள் 5 வெளிநாடுகளுக்கு தயாரித்துக் கொடுக்க தயாராக உள்ளது.

dinamalar