73 சபா சட்டமன்ற தொகுதிகள் – பெர்சத்து 45, அம்னோ 32 கோருகின்றன

சபா மாநில தேர்தலை எதிர்கொள்ள அம்னோவிற்கும் பெர்சத்துவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து முடிவு செய்ய தனது கட்சி நாளை கூடும் என்று சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.

பாரிசான் கூட்டணிகளான பிபிஆர்எஸ் மற்றும் எம்.சி.ஏ. உடன் தொகுதிகளைப் பிரிப்பது பற்றி விவாதிக்க சபா அம்னோ நாளை ஒரு கட்சி கூட்டத்தை நடத்தும் என்றார் அவர்.

முன்னதாக, மொத்தம் 73 மாநில இடங்களில் 45 இடங்களில் பெர்சத்து கட்சி போட்டியிடும் என்று சபா பெர்சத்து கட்சியின் தலைவர் ஹாஜிஜி நூர் கூறிய அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க புங் மொக்தரிடம் கேட்கப்பட்டது.

“நாங்கள் தயாராக உள்ளோம், பெர்சத்து வேட்பாளர்கள் போட்டியிடும் 45 சட்டமன்ற தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். நாங்கள் போட்டியிட வேண்டிய இடங்களை வெல்வதற்கு நம்பகமான, மற்றும் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை முன்வைப்போம்” என்று ஹாஜிஜி நூர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தலை எதிர்கொள்ளவும், வெற்றியை உறுதி செய்வதற்கும், தேசிய கூட்டணியின் கூறு கட்சிகளான அம்னோ மற்றும் பாரிசன் நேஷனல் கட்சிகளுடன் கலந்துரையாட பெர்சத்து சபா தயாராக உள்ளது என்றும் ஹாஜிஜி நூர் கூறியுள்ளார்.

பெர்சத்து கட்சியில் சேருவதற்கு முன்பு, 14வது பொதுத் தேர்தலில் அம்னோ டிக்கெட்டில் வென்ற எட்டு அம்னோ தலைவர்களில் ஹாஜிஜியும் ஒருவர். அவர் சபா முதல்வர் ஷாஃபி அப்தாலின் கீழ் சபா மாநில அரசாங்கத்தை ஆதரிக்கிறார்.

மாநில தொகுதிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து அம்னோ மற்றும் பிற கட்சிகளுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாக ஹாஜிஜி கூறியதை வரவேற்பதாக புங் மொக்தார் கூறினார்.

முன்னதாக, கட்சி பாரம்பரியமாக போட்டியிட்ட 32 மாநில இடங்களில் அம்னோ போட்டியிடும் என்று பங் மொக்தார் கூறினார்.