கோவிட்-19: 7 புதிய பாதிப்புகள், தாவார் திரளையிலிருந்து பாதிப்புகள் எதுவும் இல்லை

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான ஏழு புதிய பாதிப்புகள் இன்று பிற்பகல் வரை பதிவாகியுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றில் ஐந்து உள்நாட்டு தொற்று மற்றும் இரண்டு இறக்குமதி பாதிப்புகள் ஆகும்.

இதுதொடர்பாக, சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது 184 ஆக உள்ளதுஎன்றும், மொத்தம் 9,274 பாதிப்புகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

அனைத்து உள்ளூர் பாதிப்புகளும் சரவாக்கில் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் புதிய திரளைகள் அல்லது இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

“நாட்டில் தொற்று ஏற்பட்ட ஐந்து பாதிப்புகளில், இரண்டு மலேசிய குடிமக்கள் மற்றும் மூன்று மலேசியர்கள் அல்லாதவை ஆகும்.”

“இரண்டு இறக்குமதி பாதிப்புகள் பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து தலா ஒரு பாதிப்பை உள்ளடக்கியது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கோவிட்-19 காரணமாக எந்த இறப்பும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இறப்புக்களின் எண்ணிக்கை 125 ஆக அல்லது மொத்த பாதிப்புகளில் 1.35 சதவீதம் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

“தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) எட்டு நேர்மறை பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதில் ஐந்து பாதிப்புகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.”

“இன்று ஆறு பாதிப்புகள் மீட்கப்பட்டுள்ளன, இதனால் முழுமையாக மீட்கப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 8,965 அல்லது மொத்த பாதிப்புகளில் 96.7 சதவீதம் ஆகும்” என்று அவர் கூறினார்.