நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

நடப்பிலிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் முகிதீன் யாசின்அறிவித்தார்.

கடந்த ஜூன் 7-ஆம் தேதி அமலுக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு நிறைவடைய இருந்தது.

“கொவிட்-19 தொற்று இன்னும் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதே வேளையில், சிவகங்கா போன்ற புதிய திரளைகள் தொடர்ந்து பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்திலும் நாம் இருக்கிறோம். இதனைக் கருத்தில் கொண்டு, நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலத்தை நீட்டிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது” என்று முகிதீன் கூறினார்.