செப்டம்பர் 30-ம் தேதி கேஎல்ஐஏ2 – நீலாய் சென்ட்ரல் பேருந்து பயணிகளுக்குக் கோவிட் -19 எச்சரிக்கை

கோவிட் -19 | கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் (KLIA2) இருந்து, நிலாய் சென்ட்ரலுக்குப் பேருந்தில் சென்றப் பயணிகளுக்கு நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை கோவிட் -19 எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த எச்சரிக்கையின்படி, கேஎல்ஐஏ 2, பிளாட்ஃபார்ம் பி 10-லிருந்து, இரவு 9 மணிக்குப் புறப்பட்ட மைபஸ் (myBAS) பேருந்து, உரிமத் தகடு NDH 2259-ல் பயணம் செய்த பயணிகள், சிரம்பான் சுகாதார அலுவலகத்தின் கோவிட் -19 செயல்பாட்டு அறையை 06-7634809 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேற்றைய நிலவரப்படி, நெகிரி செம்பிலானில், 18 கோவிட் பாதிப்புகள் உள்ளன.

கோவிட் -19 பாதிப்புகள் நாட்டில் மீண்டும் அதிகரித்து வருகின்றன. திங்கள்கிழமை முதல் 1,612 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இவை பெரும்பாலும் சபா மற்றும் கெடாவைச் சேர்ந்தவையாகும்.