கோவிட் 19 : இன்று 834 புதியத் தொற்றுகள், 2 இறப்புகள் பதிவு

நாட்டில், இன்று 834 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அவசரப் பிரிவில் 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 32 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று 900 நோயாளிகள் குணமடைந்த வேளை, சபாவில் 2 இறப்புகள் நேர்ந்துள்ளன, இருவரும் மலேசியர்கள். ஆக, இதுவரையில் இந்நோய்க்கு 251 பேர் பலியாகியுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார்.

சபா தொடர்ந்து அதிக புதிய பாதிப்புகளைப் (503) பதிவுசெய்த மாநிலமாக உள்ளது.  அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 129, லாபுவானில் 105, பினாங்கில் 21, கோலாலம்பூரில் 20, நெகிரி செம்பிலானில் 16, சரவாக்கில் 14, ஜொகூரில் 8, புத்ராஜெயாவில் 6, பேராக் & கெடாவில் 3, கிளந்தானில் 2 மற்றும் பஹாங்கில் 1.