கோவிட் 19 : இன்று 1,054 புதியத் தொற்றுகள், 12 இறப்புகள் பதிவு

இன்று மதியம் வரையில், கடந்த 24 மணி நேரக் காலகட்டத்தில், நாட்டில் 1,054 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 12 இறப்புகளும் நேர்ந்துள்ளன. இறப்புகள் அனைத்தும் சபாவில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது, ஆக, சபாவின் மொத்த இறப்பு எண்ணிக்கை 131.

இதன் பொருள் என்னவென்றால், கோவிட் -19 காரணமாக, நாட்டில் இறந்தவர்களில் பாதி (49.8%) நோயாளிகள் சபாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இறந்தவர்கள் 14 வயதிற்கும் 82 வயதிற்கும் இடைப்பட்டவர்கள், அவர்களில் 4 பேர் வெளிநாட்டினர்.

இன்று 875 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 96 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 32 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று, 2 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவை, செர்காஸ் திரளை – நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், பெர்மாத்தாங் திரளை – கெடா, கூலிம் மாவட்டம் ஆகியவையாகும்.

சபா 678 புதிய நோய்த்தொற்று பதிவுகளுடன், தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழ்கிறது.

சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 124, லாபுவானில் 81, நெகிரி செம்பிலானில் 71, பினாங்கில் 35, சரவாக்கில் 21, கெடாவில் 12, கோலாலம்பூரில் 10, புத்ராஜெயாவில் 3, பேராக்கில் 2, மலாக்கா, திரெங்கானு மற்றும் ஜொகூரில் 1.