பைசர் மற்றும் மாடர்னா இன்க் தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும்…?

பைசர் மற்றும் மாடர்னா இன்க் தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும்…?

இந்த ஆண்டு இறுதிக்குள் 2 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், கொரோனா தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தேடலில் முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இப்போது சாதகமான முடிவுகளை வழங்கியுள்ளன.

ஃபைசர் இன்க் மற்றும் மாடர்னா இன்க் ஆகியவற்றின் ஊக்கமளிக்கும் சோதனை முடிவுகள், அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி போன்ற போட்டியாளர்களுக்கு ஒரு உயர்வை கொடுத்து உள்ளன.  விரைவில் அவற்றின் முக்கிய அறிக்கைகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 2 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 5 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளதாக மற்றொருர் பன்னாட்டு மருந்து நிறுவனமான ஃபைசரும் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் தலா இரண்டு முறை போடப்படக்கூடிவை என்பதால், இந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் மூன்றரை கோடி பேருக்கு தடுப்பூசி காவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு தனது உற்பத்தியை விரிவுபடுத்தி, 13 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய ஃபைசரும், 50 முதல் 100 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க மாடர்னாவும் திட்டமிட்டுள்ளன.

மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இது மனித உயிரணுக்களை ஹேக் செய்ய “மெசஞ்சர் ஆர்.என்.ஏ” என்ற மூலக்கூறின் செயற்கை பதிப்பைப் பயன்படுத்துகிறது,

மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இது மனித உயிரணுக்களை ஹேக் செய்ய “மெசஞ்சர் ஆர்.என்.ஏ” என்ற மூலக்கூறின் செயற்கை பதிப்பைப் பயன்படுத்துகிறது,

dailythanthi