கோவிட் 19 : இன்று 1,290 புதியத் தொற்றுகள், 4 இறப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,210 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 878 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சபாவில் அதிக எண்ணிக்கையிலான (51.2 %) புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதற்கடுத்த நிலையில் கிள்ளான் பள்ளத்தாக்கு (37.1 %) மற்றும் பேராக் (3.7%) எனப் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இன்று, சபாவில் 2 மரணங்கள், பேராக் மற்றும் ஜொகூரில் தலா 1 மரணமுமாக மொத்தம் 4 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 326-ஆக உயர்ந்துள்ளது.

திரெங்கானு, பஹாங், புத்ராஜெயா மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவசரப் பிரிவில் 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 37 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

660 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது

சபாவை அடுத்து சிலாங்கூரில் 407 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சபா மற்றும் சிலாங்கூரை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

கோலாலம்பூரில் 72, பேராக்கில் 48, நெகிரி செம்பிலானில் 32, கிளந்தானில் 17, ஜொகூர் மற்றும் லாபுவானில் 15, சரவாக் மற்றும் பினாங்கில் 8, கெடாவில் 7, மலாக்காவில் 1,

மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

காப்பாஸ் பிஜே திரளை – சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம்; பிரிஸ்திஜ் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் & தித்திவங்சா மாவட்டம்; பா பெர்ச்சாம் திரளை – பேராக், கிந்தா மாவட்டம்; கியம்பாங் திரளை – ஜொகூர், மெர்சிங், கோத்த திங்கி & ஜொகூர் பாரு மாவட்டங்கள்.

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம், இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை. இனி அவரது பத்திரிக்கையாளர் நேரடி சந்திப்புகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும் என்று தெரிகிறது.