கோவிட் 19 : இன்று 1,315 புதியத் தொற்றுகள், முதலிடத்தில் தொடர்ந்து சபா

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,315 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 1,110 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்றைய 4 இறப்புகளும் சபாவில் பதிவாகியுள்ளன, இருவர் மலேசியர்கள், இருவர் வெளிநாட்டவர். ஆக, நாட்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 354-ஆக பதிவாகியுள்ளது.

அவசரப் பிரிவில் 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 43 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

476 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது

சபாவை அடுத்து சிலாங்கூரில் 266 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

திரெங்கானு, பஹாங், புத்ராஜெயா, லாபுவான், சரவாக் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சபா மற்றும் சிலாங்கூரை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

கோலாலம்பூரில் 191, பேராக்கில் 167, பினாங்கில் 92, ஜொகூரில் 46, நெகிரி செம்பிலானில் 41, கிளந்தானில் 18, கெடாவில் 17 மற்றும் மலாக்காவில் 1.

மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளது. அவை :-

பிடிஎஸ் சிபுகா திரளை – சபா, சண்டகான் மாவட்டம்; ஜெஸ்செல்தன் கட்டுமான பகுதி திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் & தித்திவங்சா மாவட்டம்; பா பெர்ச்சாம் திரளை – சபா, கோத்தா கினபாலு மாவட்டம்; டெர்மாகா திரளை – சபா, சண்டகான் மாவட்டம்; தெம்பாசுக் திரளை – சபா, கோத்த பெலுட் மாவட்டம்; யூடி எஸ்.எஸ்.2 திரளை – சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம்; ஆவான் பாரு கட்டுமான பகுதி திரளை – கோலாலம்பூர், கெப்போங் & செராஸ் மாவட்டங்கள்.