எம்பி-ஐத் தூக்கியெறிந்துவிட்டு, அம்னோ பெர்சத்துவுடன் ‘சமாதானம்’ செய்ய விரும்புகிறது

பேராக் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், மாநிலத்தில் தேசியக் கூட்டணி அரசாங்கத்தைத் தொடரப் பெர்சத்துவுடன் சமாதானம் நாடுகிறது அம்னோ.

பெர்சத்து துணைத் தலைவரும் பேராக் மந்திரி பெசாருமான அஹ்மத் பைசல் அஸுமுவுக்கு எதிரான, நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தாக்கல் செய்து, அதற்கு ஆதரவாக அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த சில நாட்களுக்குப் பிறகு அம்னோ இதனை விரும்புகிறது.

இதன் விளைவாக, ஃபைசல் கடந்த சனிக்கிழமை மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகினார்.

முன்னதாக, பேராக்கில் பி.என். அரசாங்கத்தைத் தக்கவைத்துகொள்ள, பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியிலுள்ள தனது சகாக்களுக்கு கடிதம் எழுதியதாக அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் தெரிவித்தார்.