கோவிட்-19 : இன்று 2,062 புதிய நேர்வுகள், பாதி எண்ணிக்கை சிலாங்கூரில் மட்டும்

சுகாதார அமைச்சு இன்று, 2,062 புதிய கோவிட் -19 நேர்வுகளையும் ஓர் இறப்பையும் அறிவித்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் 73.7 விழுக்காடு புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

911 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்று, 69 வயது நிரம்பிய ஒரு வெளிநாட்டினர் லாபுவானில் இறந்தார்.

அவசரப் பிரிவில் 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 51 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

சரவாக், திரெங்கானு மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 1,014, கோலாலம்பூரில் 504, சபாவில் 252, ஜொகூரில் 167, நெகிரி செம்பிலான் 57, பினாங்கில் 23, பேராக்கில் 17, மலாக்காவில் 9, பஹாங்கில் 6, கெடாவில் 5, கிளந்தானில் 4, புத்ராஜெயா மற்றும் லாபுவானில் தலா 2.

மேலும் இன்று, 8 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

ரெசிடன் கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் மாவட்டம்; பாசார் பாரு திரளை – சிலாங்கூர், கிள்ளான் & கோல லங்காட் மாவட்டங்கள்; புக்கிட் நாகா கட்டுமானத் தளத் திரளை – சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம்; காசே கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், கெப்போங் மாவட்டம்; சீனார் வியூ கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், கெப்போங் மாவட்டம்; பாகினாதான் திரளை – சபா, ரானாவ், பாபார் & கோத்த பெலுட் மாவட்டம்; தம்போய் ஜெயா திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம்; ராப்பாட் திரளை – பேராக், கிந்தா & பேராக் தெங்கா மாவட்டங்கள்.