கோவிட் 19 : இன்று 1,704 புதிய நேர்வுகள், 11 மரணங்கள்

சுகாதார அமைச்சு இன்று, 1,704 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது.

சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான நேர்வுகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து சபா மற்றும் ஜொகூர் உள்ளன.

இன்று, 2,726 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 51 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. 11 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 673, சபாவில் 316, ஜொகூரில் 179, கோலாலம்பூரில் 112, பினாங்கில் 103, பேராக்கில் 75, நெகிரி செம்பிலான் 72, கெடாவில் 53, கிளந்தானில் 47, பஹாங்கில் 21, புத்ராஜெயாவில் 17, லாபுவானில் 16, சரவாக்கில் 10, மலாக்காவில் 6, திரெங்கானுவில் 4.

மேலும் இன்று, 11 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஜொகூர் பாரு, கூலாய், பொந்தியான், பத்து பஹாட், கோத்த திங்கி, குளுவாங் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 3 திரளைகள் ஜொகூரில் கண்டறியப்பட்டுள்ளன. மற்றத் திரளைகள் கிளந்தான், சபா, திரெங்கானு ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன.