‘இறைச்சி பரிவர்த்தனை’: ஜொகூர் எம்.ஏ.சி.சி. 4 தனிநபர் இறக்குமதி நிறுவனங்களைத் தடுத்து வைத்திருக்கிறது

மலேசியாவிற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து, மூலப்பொருட்கள் கடத்தல் தொடர்பான ஊழலில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) ஜொகூர், உறைந்த இறைச்சி இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளது.

ஆதாரங்களின்படி, 39 முதல் 50 வயதுக்குட்பட்ட அவர்கள், நேற்று இரவு, ஜொகூர் எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எம்.ஏ.சி.சி. இந்த விஷயத்தைத் தீவிரமாகக் கருதுகிறது, ஏனெனில் இது மக்களுக்கு, குறிப்பாக நாட்டின் முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சினைகளை உள்ளடக்கியது என எம்.ஏ.சி.சி.-யைச் சார்ந்த ஒருவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் படி விசாரணை நடத்தப்பட்டது.

“உள்நாட்டு வர்த்தக அமைச்சு, நுகர்வோர் விவகாரங்கள், கால்நடை சேவைகள் திணைக்களம், தனிமைப்படுத்துதல் மற்றும் ஆய்வு சேவைகள் திணைக்களம் (மாகிஸ்) மற்றும் அரச மலேசியத் சுங்கத் துறை போன்ற பல நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்புடன், அந்த இறைச்சி இறக்குமதியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

ஜொகூர் எம்.ஏ.சி.சி. இயக்குநர் அஸ்மி அலியாஸைத் தொடர்பு கொண்டபோது, கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். தடுத்து வைக்கப்பட்ட அனைவரும், இன்று காலை ரிமாண்ட் விண்ணப்பத்திற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

  • பெர்னாமா