ஜெர்மனியில் முழு ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீடிப்பு

ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு பிப்ரவரி 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பெர்லின்: கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஜெர்மனியில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 49 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது குறித்து அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.

இதற்கிடையே, புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், ஜெர்மனியில் அமலில் உள்ள முழு ஊரடங்கு பிப்ரவரி 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த முழு ஊரடங்கை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது என அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

malaimalar