கூட்டரசுப் பிரதேசங்களிலும் 6 மாநிலங்களிலும் பிப்ரவரி 4 வரை பி.கே.பி. நீட்டிப்பு

நாட்டில், சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர், பினாங்கு, கிளந்தான் மற்றும் சபா ஆகிய ஆறு மாநிலங்களிலும், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் கூட்டரசுப் பிரதேசங்களிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) பிப்ரவரி 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த நீட்டிப்புடன், சரவாக் தவிர, மலேசியா முழுவதுமான பி.கே.பி. ஒரே நாளில் முடிவடையும்.

அண்மையில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.