ஜொகூர் எம்பி அலுவலகம் துப்புரவுக்காக மூடப்பட்டது

ஜொகூர் பாரு, இஸ்கந்தார் புத்ரியில் உள்ள ஜொகூர் மந்திரி பெசார் அலுவலகம், கோவிட் -19 சங்கிலித் தொடரை உடைக்கும் பொருட்டு, துப்புரவு பணிகளைச் செய்ய வழிவிட, நாளை முதல் பிப்ரவரி 2 வரை தற்காலிகமாக மூடப்படும்.

இன்று ஓர் அறிக்கையின் மூலம், ஜொகூர் மந்திரி பெசார் அலுவலகம் இதனைத் தெரிவித்தது. அதே நேரத்தில், முக்கியமான விஷயங்கள் எனின், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதில் கூறபப்ட்டுள்ளது.

“கோவிட் -19 தொற்றுநோயைக் கூட்டாக எதிர்த்துப் போராட அமைக்கப்பட்ட அனைத்து எஸ்ஓபி-க்களுக்கும் எப்போதும் இணங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

“எப்போதும் முகக்கவரியை அணிந்து, கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள், வெளியில் முக்கியமான விஷயங்கள் எதுவும் இல்லையென்றால் வீட்டிலேயே இருங்கள்,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பெர்னாமா