கோவிட் 19 : இன்று 5,000 மேற்பட்ட புதிய நேர்வுகள், 14 மரணங்கள்

நாட்டில் இன்று, பிற்பகல் நிலவரப்படி 5,298 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன. மூன்றாவது நாளாக இன்று 5,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த எண்ணிக்கையில், சிலாங்கூர் எண்ணிக்கையிலான பாதிப்புகளை (2,460) பதிவுசெய்துள்ளது, அதனைத் தொடர்ந்து, ஜொகூர் (1,020), கோலாலம்பூர் (783), சபா (298) ஆகியவை உள்ளன.

கோவிட் -19 காரணமாக, இன்று மொத்தம் 14 புதிய இறப்புகளும் பதிவாகியுள்ளன, இதுவரையில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 760-ஆக உள்ளது.

4,522 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 313 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 127 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூர், ஜொகூர், சபா, கோலாலம்பூர் ஆகியவை தவிர்த்து, மற்ற மாநிலங்களில் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சரவாக் (135), மலாக்கா (82), திரெங்கானு (83), பஹாங் (74), பினாங்கு (69), பேராக் (63), கெடா (53), நெகிரி செம்பிலான் (42), கிளந்தான் (30), லாபுவான் (24), புத்ராஜெயா (6), பெர்லிஸ் (5).

மேலும் இன்று 10 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 10 பணியிடத் திரளைகள் ஆகும்.