இன்று 3,391 புதிய நேர்வுகள், 19 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,391 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிலாங்கூர், ஜொகூர், சரவாக், பேராக், மலாக்கா, திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்களும், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசமும், ஜனவரி 13 முதல் தொற்று அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகின்றன.

சிலாங்கூரில் 1,228 பாதிப்புகள் (36.2 விழுக்காடு) மிக அதிகமானப் புதிய தினசரி பாதிப்புகளாகப் பதிவாகியுள்ளன.

15 புதியத் திரளைகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் இரண்டு சமூகம் சார்ந்த திரளைகள், 12 பணியிடம் தொடர்பான திரளைகளாகும்.

இன்று, 3,392 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 310 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 134 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் 1,228, ஜொகூர் 598, கோலாலம்பூர் 395, சபா 196, சரவாக் 178, பினாங்கு 149, மலாக்கா 141, நெகிரி செம்பிலான் 116, பேராக் 92, கெடா 91, திரெங்கானு 84, கிளாந்தான் 58, பஹாங் 51, லாபுவான் 7, புத்ராஜெயா 6, பெர்லிஸ் 1.