இன்று 2,464 புதிய நோய்த்தொற்றுகள், ஜனவரி 11-க்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கை

கோவிட் 19 | நாட்டில் இன்று, இன்று நண்பகல் வரை மொத்தம் 2,464 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளும் 7 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனவரி 11-க்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும்.

இன்றைய இறப்புகள் சரவாக் (3), சிலாங்கூர் (2), சபா (1) மற்றும் பினாங்கில் (1) எனப் பதிவாகியுள்ளன. ஆக, நாட்டில் இதுவரை இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 965.

மேலும் இன்று, 11 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 9 பணியிடம் சார்ந்தவை.

இன்று 4,525 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 111 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,103), ஜொகூர் (492), சரவாக் (161), கோலாலம்பூர் (154), சபா (116), கெடா (92), கிளந்தான் (88), பேராக் (85), பினாங்கு (56), திரெங்கானு (51), நெகிரி செம்பிலான் (40), மலாக்கா (11), பஹாங் (10), புத்ராஜெயா (4), லாபுவான் (1).