இன்று 2,192 புதிய நோய்த்தொற்றுகள், பாதிக்கும் மேற்பட்ட நேர்வுகள் கிள்ளான் பள்ளத்தாக்கில்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,192 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகியுள்ளன.

“இன்று பதிவான ஆறு இறப்புகளில், சிலாங்கூரில் இரண்டு, சபா, சரவாக், பஹாங் மற்றும் ஜொகூரில் தலா ஒன்றும் சம்பவித்துள்ளன,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

இன்று 3,414 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 91 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

லாபுவானில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (910), கோலாலம்பூர் (303), சரவாக் (221), ஜொகூர் (211), பேராக் (148), பினாங்கு (135), சபா (110), நெகிரி செம்பிலான் (64), கிளந்தான் (28),  கெடா (26), மலாக்கா (14), பஹாங் (7), புத்ராஜெயா (7), திரெங்கானு (4),   பெர்லிஸ் (1).

இன்று 8 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 7 பணியிடங்களையும் ஒன்று சமூகம் சார்ந்தவையும் ஆகும்