இன்று 1,828 புதிய தொற்றுகள், 5 இறப்புகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று பிற்பகல் நிலவரப்படி, மொத்தம் 1,828 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜொகூர் இன்று அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது.

இன்று 5 இறப்புகள் பதிவாகியுள்ளன, சபா மற்றும் கோலாலம்பூரில் தலா இரண்டு, மலாக்காவில் ஒன்று. ஆக, இதுவரை நாட்டில் இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 1,135-ஆக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இன்று 2,487 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 90 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

லாபுவானில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

ஜொகூர் (490), சிலாங்கூர் (453), சரவாக் (220), நெகிரி செம்பிலான் (167), பேராக் (144), சபா (104), பினாங்கு (85), கோலாலம்பூர் (75), கிளாந்தான் (36), கெடா (16), திரெங்கானு (15), பஹாங் (8), மலாக்கா (8), புத்ராஜெயா (6), பெர்லிஸ் (1).

இன்று 7 புதியத் திரளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றுள் 5 பணியிடம் சார்ந்தவை.

ஆக, தற்போது செயலில் உள்ள திரளைகளின் மொத்த எண்ணிக்கை 488 ஆகும்.