இன்று 1,529 புதிய நேர்வுகள், இந்த ஆண்டின் மிகக் குறைந்த எண்ணிக்கை

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,529 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது ஆண்டின் மிகக் குறைந்த தினசரி எண்ணிக்கை இதுவாகும்.

இன்று 2,076 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 160 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 79 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இதற்கிடையே இன்று 8 மரணங்கள் சம்பவித்துள்ளன். சபா, பினாங்கு மற்றும் ஜொகூரில் தலா இரண்டு மரணங்களும், கோலாலம்பூர் மற்றும் சரவாக்கில் தலா ஒரு மரணமும் நிகழ்ந்துள்ளது.

இறந்த நோயாளிகளில் ஏழு பேர் மலேசியர்கள், ஒருவர் வெளிநாட்டவர்.

லாபுவானில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (726), சரவாக் (252), ஜொகூர் (120), நெகிரி செம்பிலான் (89), பினாங்கு (76), கோலாலம்பூர் (71), சபா (71), பேராக் (49), கிளந்தான் (28),  பெர்லிஸ் (17), திரெங்கானு (13), கெடா (9), மலாக்கா (4), பஹாங் (3), புத்ராஜெயா (1).

இன்று 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 3 பணியிடம் சார்ந்தவை.