இன்று 1,575 புதிய நோய்த்தொற்றுகள், 3 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,575 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிக்கும் மேற்பட்ட நேர்வுகள் (54.8 விழுக்காடு) கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து சரவாக் (11 விழுக்காடு), ஜொகூர் (8.6 விழுக்காடு), பினாங்கு (8.4 விழுக்காடு).

இதற்கிடையில், பெர்லிஸில் இன்று 25 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.

மூன்று புதிய இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன, இது தேசியக் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கையை 1,203-ஆக உயர்த்தியுள்ளது.

பலியான மூன்று பேரும் முறையே கோலாலம்பூர், சபா மற்றும் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் வெளிநாட்டவர்.

இன்று 2,042 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 67 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (751), சரவாக் (173), ஜொகூர் (135), பினாங்கு (132), கோலாலம்பூர் (108), சபா (57), பேராக் (44), கிளந்தான் (43), நெகிரி செம்பிலான் (32), பெர்லிஸ் (25),  மலாக்கா (25), கெடா (23), திரெங்கானு (16), பஹாங் (4), புத்ராஜெயா (4), லாபுவான் (3).

இன்று 10 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 5 பணியிடம் சார்ந்தவை.