பி.கே.ஆர்-அம்னோ ஒத்துழைப்பு : சாத்தியத்தை அன்வர் மறுக்கவில்லை

பி.கே.ஆர் – அம்னோ இடையில், ஒத்துழைப்புக்கான வாய்ப்பை அன்வர் இப்ராஹிம் மறுக்கவில்லை, ஆனால் முடிவெடுப்பதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கலாம் என்றார்.

மார்ச் 14-ம் தேதி, மிங்குவான் மலேசியாவுடனான நேர்காணலைத் தொடர்ந்து, அம்னோவுடனான கலந்துரையாடல்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக பி.கே.ஆர். தலைவர் கூறினார்.

“நீங்கள் முழு சூழலையும் (அறிக்கை) படித்தால், ஓர் உடன்பாடு அல்லது புரிதல் இருப்பதாக நாங்கள் சொல்வதற்கு, அது சற்று சீக்கிரம் என்று நான் நினைக்கிறேன்.

“பி.கே.ஆர். மற்றும் அம்னோ இடையே ஆரம்ப விவாதங்கள் இருந்தன, ஒத்துழைப்புக்கான சாத்தியத்தை நான் மறுக்கவில்லை. இதை அடிமட்ட ஆதரவாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென நான் எம்.பி.க்களுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் தெரிவிக்கிறேன்.

“(ஆனால்) ஒரு புரிதல் ஏற்பட்டுவிட்டதாக அனுமானிக்க வேண்டாம், ஏனென்றால் பல வர்ணனையாளர்கள் ஓர் ஒப்பந்தம் நடந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்,” என்று அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.