புதிய இயல்பு நிலையில், அம்னோ ஆண்டு பொதுக்கூட்டம் இம்மாத இறுதியில்

மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள அம்னோ ஆண்டு பொதுகூட்டம் தற்போதைய புதிய இயல்பு நிலைக்கு ஏற்ப, புதிய சூழ்நிலையில் நடைபெறும்

பாரம்பரியமாக, அம்னோ உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைக்கும் இந்த ஆண்டு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் புத்ரா உலக வர்த்தக மையத்தில் (பி.டபிள்யூ.தி.சி) நடைபெறும். கூடுதலாக, வர்த்தகர்கள் அவ்விடத்தைப் பயன்படுத்தி, விற்பனையின் மூலம் இலாபம் ஈட்டி வந்தனர்.

இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, அம்னோ தனது “பாரம்பரியத்தை” மாற்றியுள்ளது, எந்தக் கடைகளும் திறக்கப்படாது, பிரதிநிதிகள் இல்லாத கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.

ஊடகங்களுக்கும் இதுவே – மாநாட்டு மண்டபத்திற்குள் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை, அதற்குப் பதிலாக அவர்கள் வழங்கப்பட்ட ஊடக அறையில் இருக்க வேண்டும்.

இவை அனைத்தும் இன்று ஓர் ஊடகச் சந்திப்பில் அறிவிக்கப்பட்டன.

தேசியப் பாதுகாப்பு மன்றம், அவர்கள் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில், 74-வது ஆண்டு பொதுகூட்டத்தை நடத்த ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.