இன்று 3,551 புதிய நேர்வுகள், 19 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,551 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன.

மேலும், இன்று 19 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. தேசியக் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை தற்போது 1,610 ஆக உள்ளது.

இன்றையப் புதிய இறப்புகள் சரவாக் (5), சிலாங்கூர் (3), ஜொகூர் (3), கிளந்தான் (2), கோலாலம்பூர் (2), திரெங்கானு (1), பஹாங் (1), நெகிரி செம்பிலான் (1) மற்றும் கெடா ( 1).

இன்று 2,709 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 199 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 1,137 (138,846), சபா – 69 (58,580), ஜொகூர் – 258 (46,991), கோலாலம்பூர் – 477 (45,567), சரவாக் – 391 (33,477), பினாங்கு – 305 (20,945), நெகிரி செம்பிலான் – 85 (19,265), கிளந்தான் – 326 (16,177), பேராக் – 137 (15,268), கெடா – 112 (10,630), மலாக்கா – 82 (7,761), பஹாங் – 97 (5,512), திரெங்கானு – 58 (4,641), லாபுவான் – 2 (2,475), புத்ராஜெயா – 12 (1,420), பெர்லிஸ் – 3 (372).

இன்று 14 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.