இன்று 4,498 புதிய நேர்வுகள், 22 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 4,498 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்று 22 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,632 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 3,449 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 211 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,424), சரவாக் (750), கோலாலம்பூர் (436), ஜொகூர் (327), பினாங்கு (313), கிளந்தான் (297), கெடா (209), நெகிரி செம்பிலான் (188), சபா (153), பேராக் (148), திரெங்கானு (87), பஹாங் (78), மலாக்கா (74), புத்ராஜெயா (8), பெர்லிஸ் (4), லாபுவான் (2).

இன்று 19 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.