இன்று 4,865 புதிய நேர்வுகள், 47 மரணங்கள்

கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 4,865 கோவிட் -19 புதிய நேர்வுகளை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்று 47 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இது நாட்டில் பதிவான ஆக அதிக மரண எண்ணிக்கையாகும். இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 1,994 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த இறப்புகள் சிலாங்கூர் (18), சரவாக் (5), பினாங்கு (5), ஜொகூர் (4), கோலாலம்பூர் (4), கிளந்தான் (4), பேராக் (3), பஹாங் (2), கெடா (1) மற்றும் நெகிரி செம்பிலான் (1) பதிவாகியுள்ளன.

இன்று 3,497 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 277 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,743), சரவாக் (512), கோலாலம்பூர் (477), ஜொகூர் (407), கிளந்தான் (406), கெடா (244), பினாங்கு (220), பேராக் (160), திரெங்கானு (156), பஹாங் (152), நெகிரி செம்பிலான் (149), மலாக்கா (127), சபா (95), புத்ராஜெயா (9), லாபுவான் (6), பெர்லிஸ் (2).

மேலும் இன்று, 19 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.