இன்று 6, 509 புதிய நேர்வுகள், 61 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,509 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், இன்று 61 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,309 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 3,452 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 369 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,049), சரவாக் (530), கோலாலம்பூர் (468), ஜொகூர் (468), கிளந்தான் (451), பினாங்கு (384), கெடா (348), நெகிரி செம்பிலான் (329), மலாக்கா (329), திரெங்கானு (263), பஹாங் (257), பேராக் (231), சபா (184), லாபுவான் (171), புத்ராஜெயா (40), பெர்லிஸ் (7).

மேலும் இன்று, 20 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 7 பணியிடத் திரளைகள், ஆறு சமூகப் பரவல் மற்றும் மூன்று மத நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டவை.