இன்று 7,478 புதிய நேர்வுகள், 63 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 7,478 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வட மாநிலங்களான கெடா (542) மற்றும் பினாங்கு (420) இன்று அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன.

இதற்கிடையில், இன்று 63 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,432 பேர் பலியாகியுள்ளனர்.

கோலாலம்பூர் (9), ஜொகூர் (8), கெடா (8), பேராக் (5), மலாக்கா (3), சரவாக் (2), நெகிரி செம்பிலான் (2), சபா (1) ) மற்றும் பஹாங் (1).

பலியானவர்களில் ஆக இளையவர் சிலாங்கூரைச் சேர்ந்த 20 வயது ஆண். இவருக்கு வேறு எந்த நோய்களும் இல்லை.

இன்று 4,665 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 756 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 377 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,455), கோலாலம்பூர் (760), சரவாக் (640), ஜொகூர் (587), கிளந்தான் (547), கெடா (542), பினாங்கு (420), நெகிரி செம்பிலான் (370), பேராக் (264), மலாக்கா (230), சபா (229), திரெங்கானு (177), பஹாங் (171), லாபுவான் (49), புத்ராஜெயா (29), பெர்லிஸ் (8).

மேலும் இன்று, 22 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றூல் 13 பணியிடத் திரளைகள் ஆகும்.