இன்று 7,105 புதிய நேர்வுகள், 71 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 7,105 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், இன்று 71 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2, 867 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 6,083 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 872 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 419 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று பெர்லிஸில் புதியத் தொற்று எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2068), கோலாலம்பூர் (817), சரவாக் (703), கிளந்தான் (531), ஜொகூர் (431), பினாங்கு (400), நெகிரி செம்பிலான் (397), பேராக் (387), சபா (318), மலாக்கா (249), கெடா (236), திரெங்கானு (198), பஹாங் (190), லாபுவான் (162), புத்ராஜெயா (18).

மேலும் இன்று, 27 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.