இன்று 7,703 புதிய நேர்வுகள், 126 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 7,703 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

கடந்த நான்கு நாள்களாக, தினசரி புதிய நேர்வுகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், இன்று அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, முதல் முறையாக இறப்புகளின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களை எட்டுகிறது.

இன்று 126 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,993 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த இறப்புகள் சிலாங்கூர் (29), கோலாலம்பூர் (18), நெகிரி செம்பிலான் (14), கிளந்தான் (12), ஜொகூர் (11), கெடா (10), லாபுவான் (8), மலாக்கா (5), திரெங்கானு (5), சரவாக் (4), பஹாங் (3), பேராக் (2), புத்ராஜெயா (2), சபா (2) மற்றும் பினாங்கு (1) என பதிவாகியுள்ளன.

இன்று 5,777 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 441 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2728), கோலாலம்பூர் (701), சரவாக் (588), நெகிரி செம்பிலான் (586), ஜொகூர் (554), கிளந்தான் (541), பினாங்கு (407), கெடா (283), சபா (254), பஹாங் (237), பேராக் (224), திரெங்கானு (224), மலாக்கா (209), லாபுவான் (159), பெர்லிஸ் (7), புத்ராஜெயா (1).

மேலும் இன்று, 22 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.