இன்று 8,209 புதிய இன்று நேர்வுகள், 103 மரணங்கள்

கோவிட் 19 | இன்று பிற்பகல் நிலவரப்படி 8,209 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் சமீபத்திய கோவிட் -19 தொற்று ஆபத்தான புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து பதிவு செய்துள்ளது.

மேலும், இன்று 103 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,096 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய புதிய இறப்புகள் சிலாங்கூர் (26), கோலாலம்பூர் (15), ஜொகூர் (14), கிளந்தான் (8), சரவாக் (8), சபா (7), திரெங்கானு (6), நெகிரி செம்பிலான் (6), பினாங்கு (4), கெடா (4), பஹாங் (2), மலாக்கா (2) மற்றும் பேராக் (1) எனப் பதிவாகியுள்ளன.

இன்று 7,049 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 446 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (3125), கோலாலம்பூர் (801), ஜொகூர் (752), சரவாக் (594), நெகிரி செம்பிலான் (576), கிளந்தான் (414), பேராக் (384), கெடா (373), மலாக்கா (322), பினாங்கு (303), சபா (203), பஹாங் (135), திரெங்கானு (127), லாபுவான் (62), புத்ராஜெயா (33), பெர்லிஸ் (5).

2,261 திரளைகளில் மொத்தம் 683 இன்னும் செயலில் உள்ளன, இன்று அறிவிக்கப்பட்ட 24 புதிய திரளைகளும் இதில் அடங்கும். அவற்றுள் 19 பணியிடத் திரளைகள் ஆகும்.